வெள்ளை மாளிகையில் 20 ஆண்டுகளாக வழங்கப்பட்ட இப்தார் விருந்து.. ரத்து செய்தார் டிரம்ப்
வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.
ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம். இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.
இந்தப் பணிகளை செய்வதற்காக வெள்ளை மாளிகை ஊழியர் ஒரு மாதம் பணியாற்றுவார்கள். அதிபர் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோரின் காலத்திலும் இந்த விருந்து வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டு வந்து.

இப்தார் விருந்து ரத்து
ஆனால் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படவில்லை. வெறும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.

திட்டம் இல்லை
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டு பழக்கம்
வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து வழங்குவது 1996ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது கிலாரி கிளிண்டன்தான் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். அப்போதிருந்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்று வந்தது.

முஸ்லிம் விரோதம்
அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம் விரோத சர்ச்சைப் பேச்சை பேசி வருபவர். அதிபர் தேர்தலின் போதே முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications