வெள்ளை மாளிகையில் 20 ஆண்டுகளாக வழங்கப்பட்ட இப்தார் விருந்து.. ரத்து செய்தார் டிரம்ப்
வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.
ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம். இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.
இந்தப் பணிகளை செய்வதற்காக வெள்ளை மாளிகை ஊழியர் ஒரு மாதம் பணியாற்றுவார்கள். அதிபர் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோரின் காலத்திலும் இந்த விருந்து வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டு வந்து.

இப்தார் விருந்து ரத்து
ஆனால் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படவில்லை. வெறும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.

திட்டம் இல்லை
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டு பழக்கம்
வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து வழங்குவது 1996ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது கிலாரி கிளிண்டன்தான் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். அப்போதிருந்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்று வந்தது.

முஸ்லிம் விரோதம்
அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம் விரோத சர்ச்சைப் பேச்சை பேசி வருபவர். அதிபர் தேர்தலின் போதே முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications