நேபாளத்தின் அனைத்து விமானங்களும் திடீர் நிறுத்தம்.. பயணிகள் பரிதவிப்பு.. என்னாச்சு?
நேபாள தலைநகர் காதமாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவையும் முடங்கியுள்ளது.
காத்மண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் சேவையும் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடங்கியதாக சொல்லப்படுகிறது.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால்
அங்கு பனிமூட்ட வானிலையே இருக்கும்.
நேபாள நாட்டில் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் திரிபுவன் விமான நிலையம் உள்ளது.

திடீரென சேவை பாதிப்பு
நேபாளத்தில் அனைத்து விமானங்களும் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணிகளில் தொழில் நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

பயணிகள் பரிதவிப்பு
விமான சேவை முடங்கியதால் பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் பதிவிடுவதை காண முடிகிறது. சமீபத்தில் நேபாளத்தின் யெட்டி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் விமான சேவை நேபாளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து
நேபாளத்தில் கடந்த 15 ஆம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர்-72 ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்தபோது அங்குள்ள ஆற்றின் கரையில் மோதி தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் வரலாற்றில் 30 ஆண்டுகளில் இது மிக மோசமான விபத்து ஆகும். இந்த விமான விபத்தில் 5 பேர் இந்தியர்கள் உள்பட 15 வெளிநாட்டவர்களும் பயணம் செய்தனர்.

நேபாளத்தில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவது ஏன்?
நேபாள நாடு முழுவதும் பெரும்பாலும் மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தரையிறக்குவதிலும் கடும் சவால்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே அங்கு அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதற்கும் காரணமாக கூறப்படுகிறது. அதுபோக பனிமூட்டமான வானிலை , போதிய பயிற்சி இல்லாத விமானிகள், நவீன தொழில்நுட்பம் இல்லாத பழைய விமானங்கள், பராமரிப்பு குறைபாடுகள் ஆகியவையும் விமான விபத்துக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications