நேபாளத்தின் அனைத்து விமானங்களும் திடீர் நிறுத்தம்.. பயணிகள் பரிதவிப்பு.. என்னாச்சு?
நேபாள தலைநகர் காதமாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவையும் முடங்கியுள்ளது.
காத்மண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் சேவையும் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடங்கியதாக சொல்லப்படுகிறது.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால்
அங்கு பனிமூட்ட வானிலையே இருக்கும்.
நேபாள நாட்டில் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் திரிபுவன் விமான நிலையம் உள்ளது.

திடீரென சேவை பாதிப்பு
நேபாளத்தில் அனைத்து விமானங்களும் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணிகளில் தொழில் நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

பயணிகள் பரிதவிப்பு
விமான சேவை முடங்கியதால் பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் பதிவிடுவதை காண முடிகிறது. சமீபத்தில் நேபாளத்தின் யெட்டி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் விமான சேவை நேபாளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து
நேபாளத்தில் கடந்த 15 ஆம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர்-72 ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்தபோது அங்குள்ள ஆற்றின் கரையில் மோதி தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் வரலாற்றில் 30 ஆண்டுகளில் இது மிக மோசமான விபத்து ஆகும். இந்த விமான விபத்தில் 5 பேர் இந்தியர்கள் உள்பட 15 வெளிநாட்டவர்களும் பயணம் செய்தனர்.

நேபாளத்தில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவது ஏன்?
நேபாள நாடு முழுவதும் பெரும்பாலும் மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தரையிறக்குவதிலும் கடும் சவால்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே அங்கு அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதற்கும் காரணமாக கூறப்படுகிறது. அதுபோக பனிமூட்டமான வானிலை , போதிய பயிற்சி இல்லாத விமானிகள், நவீன தொழில்நுட்பம் இல்லாத பழைய விமானங்கள், பராமரிப்பு குறைபாடுகள் ஆகியவையும் விமான விபத்துக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications