1300 ஆண்டுகளுக்குமுன் மூழ்கிய கப்பல்.. இஸ்ரேல் கடற்கரையில் கண்டுபிடிப்பு..ஆராய்ச்சியாளர்கள் உற்சாகம்
இஸ்ரேல்: 1300 ஆண்டுகளுக்கு கடலில் மூழ்கிய பழங்கால கப்பலை கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் பழங்காலத்தைச் சேர்ந்த கலைப்பொருட்கள், பானைகள் உள்ளிட்டவை கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு கடலில் அடிப் பகுதியில் டைவிங் செய்திருந்த இருவர், ஒரு மரத்துண்டு ஒட்டி இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் கடலுக்கு அடியில் சென்று பார்த்தபோது, சுமார் 25 மீட்டர் நீளம் கொண்ட வால்நெட் மரங்களால் செய்யப்பட்ட கப்பலை கண்டுபிடித்துள்ளனர். அந்த கப்பலுக்குள் பழங்கால பானைகளும், சில கலைப் பொருட்களும் கிடைத்துள்ளன.

எவ்வளவு ஆண்டுகள் பழமையானது?
இதனால் உற்சாகமடைந்த அதிகாரிகள், கப்பலை அகழாய்வு செய்துள்ளனர். அப்போது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிக்காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை இஸ்லாமியர்கள் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதாகவும் அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி விபத்து நிகழ்ந்தது?
1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள நிலையில், புயல் காரணமாகவோ அல்லது அனுபவமில்லாத கேப்டனாலோ கப்பல் விபத்தில் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் வரலாறு
கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் விபத்து, மதப் பிளவு இருந்த போதும் மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுடன் வர்த்தகம் நீடித்தது என்பதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள வரலாற்று புத்தகங்களில், மத்தியத்தடை கடலில் வர்த்தகம் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைப்பொருட்கள் இருந்தது எப்படி?
கலைப்பொருட்கள் இன்னும் பாதுகாப்பாக எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூழ்கிய கப்பல்கள் இஸ்ரேசல் கடற்கரையில் ஏராளமாக இருப்பதாகவும், இங்குள்ள கடல் மற்ற இடங்களைக் காட்டிலும் ஆழம் அதிகம் என்றும், அதன் அடிப்பகுதியில் உள்ள மணல் கலைப்பொருட்களைப் பாதுகாப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications