முசாரப் கொலை முயற்சி வழக்கு: பெஷாவர் சிறையில் ஒருவருக்கு தூக்கு நிறைவேற்றம்!
பெஷாவர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரப்பை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கில் மேலும் ஒருவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பாவி பிஞ்சு குழந்தைகளை தீவிரவாதிகள் படுகொலை செய்த பெஷாவர் நகரில் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் 2001-2008ஆம் ஆண்டில் அதிபர் பதவி வகித்தவர் ஜெனரல் முசாரப். இவரை ராவல்பிண்டியில் கடந்த 2003-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14-ந் தேதி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அவர் தப்பினார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் விமானப் படையில் பணியாற்றிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சாக்லலா ராணுவ நீதிமன்றம் விசாரித்து நியாஸ் முகமது உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், நஸ்ருல்லா என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2005-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
ஆனால் பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்களின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் அண்மையில் பெஷாவரில் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அப்பாவி பிஞ்சு குழந்தைகள் 132 பேரை படுகொலை செய்து வெறியாட்டம் போட்டனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தூக்கு தண்டனை மீதான இடைக்காலத் தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து முசாரப் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நிலையில் முசாரப் கொலை முயற்சி வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நியாஸ் நேற்று வரை ஹரிபூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தான். திடீரென அவன், பெஷாவர் மத்திய சிறைச்சாலைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டான். இன்று காலை பெஷாவர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
ஏற்கெனவே தீவிரவாதிகளை பெஷாவர் நகரின் மையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications