அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினாவுக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றி
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் டி கிர்ச்சனரின் மூளையில் வலப்பக்கத்தில் ரத்தக்கட்டி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரத்தக்கட்டியால் அவருக்கு தலைவலி மற்றும் உணர்வின்மை ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து பியூனஸ் ஏர்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்களிடம் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கிறிஸ்டினா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்டினா மீண்டும் தனது பணிகளைத் துவங்க 3 மாத காலம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications