நவாஸ் ஷெரிப்பிற்கு கைது வாரண்ட்... பாக் நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நலாஸ் ஷெரிப்பிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவ்ஸ ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் தங்கள் நாட்டில் முறைகேடாக சேர்த்த சொத்துகளை வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அதில் பல உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி நவாஸ் ஷெரீபின் பிரதமர் பதவியைப் பறித்தது. மேலும், நவாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹசன், ஹுசைன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உஉள்ள 3 ஊழல் வழக்குகளை இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் நவாஸ் ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அவரது டிஃபென்ஸ் வழக்கறிஞர் ஜாபிர் கான் கூறியுள்ளார்.
நவாஸ் ஷெரிப் தற்போது தன்னுடைய மனைவி கல்சமின் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications