நவாஸ் ஷெரிப்பிற்கு கைது வாரண்ட்... பாக் நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நலாஸ் ஷெரிப்பிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவ்ஸ ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் தங்கள் நாட்டில் முறைகேடாக சேர்த்த சொத்துகளை வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான தகவல் 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அதில் பல உலக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி நவாஸ் ஷெரீபின் பிரதமர் பதவியைப் பறித்தது. மேலும், நவாஸ் மற்றும் அவரது மகன்கள் ஹசன், ஹுசைன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உஉள்ள 3 ஊழல் வழக்குகளை இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் நவாஸ் ஷெரிப்பிற்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக அவரது டிஃபென்ஸ் வழக்கறிஞர் ஜாபிர் கான் கூறியுள்ளார்.
நவாஸ் ஷெரிப் தற்போது தன்னுடைய மனைவி கல்சமின் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டனில் உள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications