லிபியாவில் தலையிட்டது என் பதவி காலத்தின் மிகப் பெரிய தவறு: ஒபாமா ஒப்புதல்
நியூயார்க்: லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தம்முடைய பதவிக் காலத்தின் மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா, 2011-ம் ஆண்டு லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலைத் தொடர்ந்து தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனது. இதில் லிபியா அதிபர் கடாபி கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்த விவகாரத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தினார் என்றார்.

அதாவது லிபியாவில் அதிபராக இருந்த கடாபி புரட்சிக் குழுக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அந்நாட்டில் உள்நாட்டு குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உருவெடுத்தது. அங்கிருந்துதான் உலகின் இதர நாடுகளுக்கும் ஐ.எஸ். இயக்கம் பரவியது. லிபியாவில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் தெளிவான திட்டத்துடன் களமிறங்கியிருந்தால் ஐ.எஸ். இயக்கத்தின் மூலமான பேரழிவு தடுக்கப்பட்டிருக்கும். ஆகையால் லிபியாவில் நேட்டோ படைகளின் தலையீட்டை தமது பதவி காலத்தின் மிகப் பெரிய தவறாக ஒபாமா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் தமது பதவிக் காலத்தின் சாதனையாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து அமெரிக்காவை மீட்டதை குறிப்பிடலாம் எனவும் ஒபாமா கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications