”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா!
கராகஸ்: சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
20ம் நூற்றாண்டிலும் புரட்சி சாத்தியம் என்று உலகுக்கே உதாரணமாக காட்டியவர் புரட்சியாளர் சே குவேரா. அரசியல்வாதி, இலக்கியவாதி, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்ட புரட்சியாளரான சே குவேரா, அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு என்று கூறியதன் மூலம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா, சாலை பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கியவர்.

சே குவேரா மகன்கள்
பொலிவிய ராணுவத்தால் 1967ம் ஆண்டு கொல்லப்பட்ட சே குவேராவுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இளையவரான கமிலோ சே குவேரா, தொழிலாளர் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இவர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குநராக செயல்பட்டு வந்தார்.

ஆய்வு மையப் பணி
இது சே குவேராவின் பணி மற்றும் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அங்கு தான் சே குவாராவின் புரட்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரங்களை விரும்பாதவர்
பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டாத கமிலோ, அவ்வப்போது தந்தையைக் கௌரவிக்கும் நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டுவந்தார். சே குவேராவின் படத்தை வைத்து மார்க்கெட்டிங் செய்வதற்கு, எதிர்ப்பு தெரிவித்தார்.

மாரடைப்பால் மரணம்
இந்த நிலையில் கமிலோ சே குவேரா வெனிசுலாவின் கராகஸ் நகருக்குச் சென்ற போது, நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறப்பு, அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கியூபா அதிபர் இரங்கல்
உலகம் முழுவதும் இருந்து கமிலோ சே குவாராவின் மறைவுக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமிலோ சே குவாராவின் மறைவுக்கு கியூபா அதிபர் டயஸ் கேனல் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆழ்ந்த வலியுடன், சேவின் மகனும் அவரது சிந்தனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்" என பதிவிட்டுள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications