மனிதர்கள் பார்ப்பதால்.. வேட்டைத் தந்திரத்தை மாற்றிக் கொள்கிறதாம் குரங்குகள்.. ஒரு சுவாரசிய ஆய்வு
மனிதர்கள் கவனிப்பதால், சிம்பன்சி குரங்குகள் வேட்டையாடும் தந்திரங்களை மாற்றி கொள்கிறது என்று ஓராய்வு கூறுகிறது.
லண்டன்: சிம்பன்சி குரங்குகள். மனிதர்கள் தங்களை கவனிப்பதால் வேட்டையாடும் முறைகளையும் உத்திகளையும் மாற்றிக் கொள்வதாக விலங்கின ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் பிஎல்ஒஎஸ் ஒன் என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.
விலங்குகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் சிம்பன்சி குரங்குகள் வேட்டையாடுவது பற்றியும் அதன் உத்தி பற்றியும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வைபீரா குரங்குகள்
புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தின் முன்னணி ஆய்வாளர் கேத்தரின் ஹோபெட்டர் என்பவர் வைபீரா என்ற குரங்கு வகையின் வேட்டையாடும் முறையை ஆய்வு செய்தார். இந்த வகைக் குரங்குகள் வேட்டையாடும் போது, பல தந்திரந்தை பயன்படுத்துகிறதாம்.

இயல்பில் மாற்றம்
உகாண்டாவில் உள்ள புடோங்கோ காட்டில் குரங்குகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் ஹோபெட்டர். சிம்பன்சி வைபீரா வகை குரங்குகளை காடுகளில் பின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் இவர், மனிதர்கள் தங்களை கவனிப்பதால் குரங்குகள் தங்களது இயல்பில் இருந்து மாற்றம் பெறுகின்றன என்கிறார்.

வேட்டையில் மாற்றம்
காடுகளில் உள்ள சிம்பன்சி குரங்குகளின் அன்றாட செயல்பாடுகளை கூர்மையாக கவனித்து ஆய்வு செய்வதை, கூர்மையாக குரங்குகள் கவனிக்கின்றன. இதனால் அது பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இதனால், சிம்பன்சி குரங்குகள் பலதரப்பட்ட இனங்களை வேட்டையாடுவதை மாற்றி குறிப்பிட்ட வகை குரங்குகளை மட்டும் வேட்டையாடுகிறதாம்.

எச்சரிக்கை உணர்வு
தங்களுடைய எல்லை மற்றும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சிம்பன்சி குரங்குகளின் எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்களுடைய வாழ்க்கையில் மனிதர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது இந்த குரங்குகளுக்கு மிகவும் கடினமானதாக உள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications