ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்!
பீஜிங்: சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" ஆகும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் அடங்க மறுக்கிறது. ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் தாங்கள்தான் பலம் என்று ஆயுத ஆதிக்கத்தை நிரூபித்து வருகின்றன.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத பலத்தை காண்பித்து வருகின்றன. ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பலவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை
இந்த நிலையில் சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்டில் சீனா அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை ஏவியது, அது பூமியை குறைந்த சுற்றுப்பாதையில் வட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி இறங்கியது. இது தொடர்பாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பல ஆதாரங்கள்
சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கான பல ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது. ஹைப்பர்சோனிக் லாங் மார்ச் ராக்கெட் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவின் ஏவுகணை சோதனை துவக்கங்கள் வழக்கமாக முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால் ஆகஸ்ட் சோதனை ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டது. என்று அந்த செய்தி கூறுகிறது.
ஒலியை விடவும் 5 மடங்கு..
ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனாவின் முன்னேற்றம் "அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது" என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" என அழைக்கப்படுகிறது. ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகமாக இந்த என்ஜினைக்கொண்டு ராக்கெட்டை செலுத்த முடியும்.
இலக்கை விரைவாக அடைய முடியும்
ஹைப்பர்சோனிக் வளிமண்டலத்தில் குறைந்த பாதையில் பறந்து, இலக்கை விரைவாக அடைய முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அவற்றின் தீவிர வேகம் காரணமாக, எதிரிகளுக்கு செயல்பட சிறிது நேரம் கூட கொடுக்காது. இதனால் இந்த ஏவுகணை எதிரிகளை சண்டையிட தயாராக விடாது. வட கொரியா சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது குறிப்பிடத்தக்கது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications