வௌவால்களில் இருந்தா? ஆய்வகத்தில் இருந்தா? கொரோனா தோற்றம் குறித்த அதிமுக்கிய தகவல்களை வெளியிட்ட சீனா
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாவதற்கு முன், சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
கொரோனா வைரசின் கோரப் பிடியில் உலகம் தற்போது சிக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
உருமாறிய கொரோனா காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நேரத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்த தகவல்களை அறிந்துகொள்வது முக்கியமானதாக மாறியுள்ளது.

வல்லுநர் குழு ஆய்வு
கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வல்லுநர் குழு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் அமைத்தது. ஜனவரி மாதம் சீனா சென்ற அந்த வல்லுநர் குழு கொரோனா வைரசின் தோற்றம் குறித்த தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு சுருக்கங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. இருப்பினும், இந்த ஆய்வில் சீனாவின் தலையீடு அதிகமாக இருந்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.

சீன ஆராய்ச்சியாளர்கள்
இன்னும், சில நாட்களில் உலக சுகாதார அமைப்பின் கொரோனா தோற்றம் குறித்த முழு ஆய்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனா ஆராய்ச்சியாளர்கள் உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் விளக்கி செய்தியாளர்களைச் சந்தித்தனர். உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு வூஹான் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டபோது, அவர்களுடன் சீனா ஆராய்ச்சியாளர்களும் சென்றது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தோற்றம்
கொரோனா தொற்று எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து நான்கு வகையிலான முடிவுகள் முன் வைக்கப்பட்டது. வௌவால்களில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். வேறொரு விலங்கில் தோன்றிய கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட உணவுகளில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம். வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

ஆய்வு முடிவுகள்
ஆனால், இதில் கடைசி முடிவான வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற கூற்றைக் கிட்ட தட்ட அனைத்து உலக சுகாதார அமைப்பு வல்லுநர்களும் மறுத்துள்ளனர். முதல் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகின்றர். இது குறித்த உலக சுகாதார அமைப்பின் 400 பக்கங்களைக் கொண்ட முழு ஆய்வு முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications