உலகிற்கே மருந்து அனுப்பிய கியூபாவில்.. 2 வயது குழந்தைகளுக்கும் கொரோனா வேக்சின் செலுத்தி சாதனை.. செம
ஹவானா: கியூபாவில் இரண்டு வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா வேக்சின் கொடுத்து கியூப அரசு சாதனை படைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவிய தொடக்க காலத்தில் அதை சிறப்பாக எதிர்கொண்ட நாடுகளில் வியட்னாம் மற்றும் கியூபா ஆகியவை முக்கியமான நாடுகள். இரண்டு கம்யூனிச நாடுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்தது. முக்கியமாக கியூபா போன்ற நாடுகள் உலகம் முழுக்க பல ஏழை நாடுகளுக்கு மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் அனுப்பியது.
சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் கியூபா தங்கள் நாட்டு மக்களுக்கு கடந்த 10 மாதங்களாக வேக்சின் செலுத்தி வருகிறது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அப்டாலா, சேபேரானா 02 உள்ளிட்ட வேக்சின்களை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. கியூபாவின் இந்த இரண்டு உள்நாட்டு வேக்சின்களுக்கும் இன்னும் உலக சுகாதார மையம் அனுமதி அளிக்கவில்லை.

வேக்சின்
அப்டாலா வேக்சின் என்பது மூன்று டோஸ் வேக்சின் ஆகும். இந்த மூன்று டோஸ் வேக்சின் 92.28% தடுப்பு திறன் கொண்டது என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் சேபேரானா வேக்சின் இரண்டு டோஸ் மற்றும் ஒரு பூஸ்டர் கொண்ட வேக்சின் ஆகும். இந்த வேக்சின் 91.2 சதவிகித தடுப்பு திறன் கொண்டது ஆகும். இதைத்தான் அங்கு 18+ வயது கொண்டவர்களுக்கு கியூபா பயன்படுத்தி வருகிறது.

கியூபா
இந்த வேக்சினை குழந்தைகளிடம் சோதனை செய்து வந்த கியூபா கடந்த வெள்ளிக்கிழமை 12 வயது முதலான குழந்தைகளுக்கும் இந்த இரண்டு வேக்சினையும் கொடுக்க தொடங்கியது. 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு வேகமாக வேக்சின் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் பெரிய அளவில் பின் விளைவுகள் இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு வேக்சின் கொடுக்கும் முடிவில் கியூபா வேகம் காட்டி வருகிறது.
Recommended Video

நேற்று காலை
இந்த நிலையில்தான் கியூபா அரசு 2-11 வயது கொண்ட குழந்தைகளுக்கும் வேக்சின் போட தொடங்கி உள்ளது. நேற்று காலையில் இருந்து 2 வயது குழந்தைகளுக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது. அப்டாலா, சேபேரானா ஆகிய 2 வேக்சின்கள் குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகிறது. உலகில் சீனா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு வேக்சின் போடப்பட்டு வருகிறது. கியூபாவில்தான் முதல் நாடாக 2 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேக்சின் போடப்படுகிறது.

அனுமதி அளிக்கப்படவில்லை
ஆனால் கியூபாவின் இந்த அப்டாலா, சேபேரானா ஆகிய இரண்டு வேக்சின்களும் உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தற்போது கியூபா குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேக்சின் போட்டு வருகிறது. அப்டாலா வேக்சின் என்பது டிஎன்ஏ புரோட்டின் வகை வேக்சின் ஆகும்.

டிஎன்ஏ வேக்சின்
கொரோனாவின் புரோட்டின் ஸ்பைக்குகளை மட்டும் கொல்லப்பட்ட வைரஸில் மாற்றி அதன்மூலம் அப்டாலா வேக்சின் தயாரித்துள்ளனர். சேபேரானா வேக்சின் என்பது ஒரே வேக்சினில் இரண்டு ஆண்டிஜென்களை வைத்து உருவாக்கப்பட்ட டிஎன்ஏவகை வேக்சின் ஆகும். இரண்டும் பெரிய அளவில் குளிரான வெப்பநிலையில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டுமே அதிக எதிர்ப்பு திறன் கொண்டது என்பதால் தற்போது குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications