மடகாஸ்கர் நாட்டை சின்னாபின்னமாக்கிய அவா புயல்:29 பேர் பலி, 22 பேர் மாயம்.. 80 ஆயிரம் பேர் தவிப்பு!
மடகாஸ்கர் நாட்டை தாக்கிய அவா புயலால் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video

அண்டனானரீவோ: மடகாஸ்கர் நாட்டை தாக்கிய அவா புயலால் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்க கண்டத்துக்கு அருகே இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் என்ற தீவு நாடு உள்ளது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடும் வறட்சியும் அதைத் தொடர்ந்து உணவு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு அவா என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு பகுதியாக அந்நாட்டின் கிழக்குப் பகுதி முழுவதையும் சூறையாடியது அவா புயல்.

190 கிமீ வேகத்தில் காற்று
இப்புயலினால் மடகாஸ்கரின் கிழக்கு பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 140 முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடுங்கியெறியப்பட்டன.

வெள்ளப்பெருக்கு
மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. பலத்த காற்றோடு கனமழையும் கொட்டியது. இதனால் தலைநகர் அன்டனானரீவோ, துறைமுக நகரான டோமாசினா, டமட்டாவே உள்ளிட்ட இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சாலைகள் துண்டிப்பு
ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுந்துள்ள மரங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

29 பேர் உயிரிழப்பு
புயல் மழை காரணமாக அண்டனானரீவோ பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர்.

80,000 பாதிப்பு
22 பேர் மாயமாகியுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடிக்கடி தாக்குதல்
உலகில் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் அடிக்கடி புயல்களும் தாக்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தாக்கிய எனாவோ புயலால் 78 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications