புகுஷிமா அருகே நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானில் புகுஷிமா அணு உலைக்கு அருகே 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை காலையில் பூமிக்கு அடியில் சுமார் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் நிபுணர்கள் கூறினர். தலைநகர் டோக்கியோவில் இருந்து நிலநடுக்க மையம் 175 கி.மீ தொலைவில் இருந்தன. எனினும் டோக்கியோவில் இருந்த கட்டடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு சில மணி நேரத்திற்கு முன்புதான் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஃபுகுஷிமா அணுஉலையை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications