வந்துட்டேன்னு சொல்லு! போரில் மீண்டும் ஓங்கும் உக்ரைனின் கை! போரின் போக்கு மாறுகிறதா? பரபர பின்னணி..!
கீவ் : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய நகரங்கள் இரண்டாவது நகரான கார்கிவ் நகரம் மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் பெருமளவு தடுக்கப்படும் எனவும் இது போரின் போக்கையே மாற்றும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நேட்டோ விவகாரம், உள்நாட்டு பிரிவினைவாதிகளுக்கு சுதந்திரம் என பல்வேறு காரணங்களை கூறி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவத்தினர் போர் தொடுத்து கிட்டத்தட்ட 75 நாட்கள் கடந்துள்ள நிலையில், பல உக்ரைன் நகரங்கள் உருத்தொரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 3,381 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 3,680 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ராணுவம்
போரில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷ்யாவின் ராணுவத்தினர் கைப்பற்றி இருந்த நிலையில், போரின் தொடக்கத்திலேயே உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

உக்ரைன் முன்னேற்றம்
இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருவது அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா ராணுவம் நடத்தி வரும் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேறி வருவதோடு, ஏற்கனவே இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டெடுத்து வருகிறது. இது அந்நாட்டு ராணுவத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்கிவ் மீட்பு
அந்த வகையில் போரின் தொடக்கத்திலேயே ரஷ்யா ராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் தடுப்பு
மேலும் பல இடங்களில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவதாகவும் டெட்டியானா அபட்செங்கோ கூறியுள்ள நிலையில், "கார்கிவ் உக்ரைனின் 2வது பெரிய நகரம் என்பதால், அதன் பகுதி உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது, ரஷ்ய படைகள் முன்னேற்றத்தை தடுக்கும் என்றும், போரின் போக்கையே மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது." என போர் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். போரில் பல நாடுகளின் உதவிகள் காரணமாகவே இது சாத்தியம் என்றாலும், உக்ரைன் தீரமிக்க செயல்படுகள் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications