மூன்றாவது அலையே ஓயல.. கொரோனா நான்காவது அலை பிரான்சில் வரப்போகுதாம்.. காரணம் டெல்டா!

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசால் பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரெஞ்சு அரசின், முன்னணி அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டங்களால், வைரஸின் இந்த புதிய அலையின் விளைவு குறையலாம். மருத்துவ நிபுணர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பிரான்சை 4வது அலை தாக்கும் என்று கருதுகின்றனர்.

France likely to have fourth wave of coronavirus, says government adviser

"பிரான்சில் நான்காவது அலை தாக்குதல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இது முந்தைய மூன்று அலைகளை விட மிகவும் மிதமானதாக இருக்கும், ஏனெனில் தடுப்பூசிகளின் அளவு முன்பை ஒப்பிடும்போது இப்போது அதிகமாக உள்ளது" என்று டெல்ஃப்ரைஸி பிரான்ஸ் வானொலியில் கூறியுள்ளார்.

அறிவியல் விஷயங்களில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பிரெஞ்சு தொற்றுநோயியல் நிபுணர் அர்னாட் ஃபோண்டனெட் பி.எஃப்.எம் டிவியிடம், இன்று அளித்துள்ள பேட்டியில், பிரான்சின், கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் உயரும் என்று, தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் இந்த வார தொடக்கத்தில் அளித்த பேட்டியிலேயே, இதற்கான முன்னெச்சரிக்கையை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், கொரோனா டெல்டா வைரஸ், உலகெங்கிலும் வேகமாகப் பரவியுள்ளது. சில நாடுகளை விமான பயண கட்டுப்பாடுகளை அதிகரிக்க வைத்துள்ளது. பிரான்சின் கொரோனா கேஸ்களில் 20% டெல்டா வகை வைரசால் ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+