ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்
ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பர்க் நகரில் போராட்டம் வெடித்ததில் நகரின் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் பற்றி எரிகின்றன.
ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
|
பலத்த பாதுகாப்பு
உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து மாநாட்டுக்கு முதல் நாள் ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர்.

போலீஸார் எச்சரிக்கை
நரகத்துக்கு வாருங்கள் என்ற பதாகைகளை பிடித்தபடி தங்களது எதிர்ப்பை போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும் படி எச்சரித்தனர்.
|
கற்கள் வீச்சு
ஆனால், போராட்டக்காரர்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாததால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போலீஸார் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசப்பட்டன.
|
தள்ளுமுள்ளு
பின்னர், இரண்டாவது நாளாகவும் முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் போராட்டம் நீடித்தது. ஹம்பர்க் நகரில் தடுப்புகளை தாண்டி மாநாடு நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் தடுப்பாண்களுக்கும், கார்களுக்கும் தீ வைத்தனர்.

தீ வைத்து போராட்டம்
தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை அணைத்த போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை போராட்டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தால் ஹம்பர்க் நகரம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் காயமுற்றனர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications