புதிய பெருந்தொற்று... கொடூர பாதிப்பு.. நாடு முழுவதும் 5 நாள் லாக்டவுன்.. ஜெர்மனி அதிபர் அதிரடி
பெர்லின்: பிரிட்டன் வகை கொரோனா காரணமாக அதிகரித்துள்ள பாதிப்பை புதிய பெருந்தொற்று என்று குறிப்பிட்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், ஈஸ்டர் பண்டியை வருவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த 5 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளார்,
கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது,
இதில் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சமடைந்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தினசரி வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வருகிறது.

தீவிர ஆலோசனை
இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பல மணி நேரம் நீட்டித்த இந்த ஆலோசனையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ஐந்து நாட்கள் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் லாக்டவுன்
ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது மக்கள் அதிகளவு ஒன்றுகூடுவார்கள் என்பதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இதனால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஜெர்மனியில் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகள் அனைத்தும் ஆன்லைன் வழியே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மளிகைக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பொருந்தொற்று
இது குறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் கூறுகையில், "நிலைமை தற்போது மீண்டும் மோசமாகியுள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது" என்றார். பிரிட்டன் வகை கொரோனா காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இதை புதிய ஒரு பெருந்தொற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவல்
மேலும், இந்த புதிய வகை வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகவும் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தர். ஜெர்மனியில் தினசரி வைரஸ் பரவும் விகிதம் 100% அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,700 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல 50 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாலேயே ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி பணிகள் மந்தம்
ஜெர்மனி தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருப்பினும், ஐரேப்பியா ஒன்றியத்திற்குக் குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசிகளை டெலிவரி செய்யாமல் அஸ்ட்ராஜெனகா தாமதம் செய்து வருகிறது. இதனால் பிரிட்டனைப் போல ஜெர்மனியில் விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்த முடிவதில்லை. வைரஸ் பாதிப்பு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications