7 வயது சிறுமியை மிட்டாய் கொடுத்து சீரழித்த பிரெஞ்சு ராணுவ வீரர்கள்
ஜெனீவா: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அமைதி காக்கும் பணிக்காக வந்துள்ள பிரெஞ்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் படை வீரர்கள், சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுவரை இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், புதிதாக 6 புகார்கள் வந்துள்ளதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் 7 வயது சிறுமியை குடிநீர், மிட்டாய் தருவதாகக் கூட்டிச் சென்று பிரெஞ்சுப் படையினர் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐ.நா. விசாரணை
இந்தப் புகார்கள் தொடர்பாக தற்போது ஐ.நா. விசாரணைக் குழு விசாரணையில் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு பையனிடம் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது.

ஐரோப்பிய யூனியன் ராணுவம்
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் அமைதி காக்கும் பணிக்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள்தான் இந்த அக்கிரமச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பிரெஞ்சுக்காரர்கள் மோசம்
இதுகுறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைய அதிகாரி ஜீத் ராத் அல் ஹுசேன் கூறுகையில், பிரெஞ்சுப் படையினர் மீதுதான் அதிக புகார்கள் வருகின்றன என்றார்.

2014ல் நடந்த அக்கிரமம்
7 வயது சிறுமியிடம் நிகழ்த்தப்பட்ட அக்கிரமச் செயலானது 2014ல் நடந்துள்ளது. தலைநகர் பாங்குய் அருகே உள்ள விமான நிலையப் பகுதியில் வைத்து இதைச் செய்துள்ளனர் பிரெஞ்சுப் படையினர்.

பல ஆயிரம் பிரெஞ்சு வீரர்கள்
முன்பு பிரான்ஸிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுதான் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு. தற்போது இந்த நாட்டைச் சேர்ந்த பல ஆயிரம் வீரர்கள் அமைதி காக்கும் பணி என்ற பெயரில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு முழுவதும் முகாமிட்டுள்ளனர்.

கிறிஸ்தவர் - முஸ்லீம் மோதல்
2013ம் ஆண்டு பிற்பகுதியில் இங்கு கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து பிரெஞ்சுப் படையினர் இங்கு வந்து குவிந்தனர். இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்.

கண்ணீர் விட்டு அழுத அதிகாரி
இந்த செக்ஸ் வக்கிரச் செயல்கள் குறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் அந்தோணி பான்பரி இதுகுறித்துக் கூறும்போது கண்ணீர் வடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கதேச போலீஸும்
இந்த அக்கிரமச் செயல்களில் ஈடுபட்டோர் வரிசையில் பிரெஞ்சுப் படையினர் தவிர தற்போது வங்கதேசம், காங்கோ, நைஜர், செனகல் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள போலீஸ் படையினரும் சேர்ந்துள்ளதாக பான்பரி கூறினார்.

முதல் முறையாக
இதுவரை இதுபோன்ற செக்ஸ் வக்கிரத்தில் ஈடுபடும் ஐநா அமைதி காப்புப் படை நாடுகளின் பெயர்களை ஐ.நா வெளியில் சொன்னதில்லை. தற்போதுதான் முதல் முறையாக அது அம்பலப்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications