மனிதத்தைக் கொன்று புதைத்த ஹிரோஷிமா பேரழிவின் 69 ஆவது நினைவு தினம்.. இன்று!
ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.
1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்காவின் வெறித்தனமான அணுகுண்டு வீச்சுக்குப் பலியான பரிதாப நகரம்.
அதன் 69 ஆவது நினைவு தினம்தான், வலிகளை நினைவுகூறத்தக்க வகையில் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

அமைதிப் பூங்கா:
ஹிரோஷிமாவின் அமைதிப்பூங்காவில் இந்த நினைவு தினம் மக்களால் அனுசரிக்கப்படுகின்றது.

அஞ்சலி நாள்:
அணுகுண்டு தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், அமைதி காவலர்கள், அதிகாரிகள், ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஏப் மற்றும் அமெரிக்க தூதரான கரோலின் கென்னடி, ஹிரோஷிமா மேயர் காஷுமி மட்சுயி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

நல்லிணக்கம் தேவை:
"அணு யுத்தத்தை அழிக்க வேண்டும் என்றால் எல்லா வேறுபாடுகளையும் கடந்து நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கம் இருக்க வேண்டும். மனிதத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்" என்று மட்சுயி கூறியுள்ளார்.

அமைதி மலரட்டும்:
"ஒரு நாட்டின் அமைதியையும், செயலையும் நாம் கண்டிப்பாக சரியான வழியில் மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமுறைகள் அழிய வேண்டாம்:
ஜப்பான் பிரதமர், "அணுகுண்டு தாக்குதலுக்கு பலியான நாடு என்ற முறையில் ஜப்பானுக்கு அணு ஆயுதங்களால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதுபோன்றவைகளால் மற்ற எந்த தலைமுறையும் பாதிக்கப்படக் கூடாது" என்று கூறியுள்ளார்.

லிட்டில் பாய்:
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை சரணடைய வைப்பதற்காக அமெரிக்கா லிட்டில் பாய் என்ற யுரேனிய அணுகுண்டினை ஹிரோஷிமா மீது வீசியது.

14,000 பேர் பலி:
ஆகஸ்ட் மாதம் இதே நாளில் நடைபெற்ற இத்தாக்குதலில் 14,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதனுடைய கதிர்வீச்சு தாக்குதலால் இன்று வரையில் அம்மக்கள் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

நாகசாகி தாக்குதல்:
அதே ஆண்டில் ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியின் மீதும் தனது அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. ஆகஸ்ட் 15 அன்று உலகப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு உலகில் எங்குமே அணு யுத்தம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதம் தழைக்கட்டும்:
அணுகுண்டுகளையும், அழிவுக்கான ஆயுதங்களையும் பயன்படுத்தி, பயன்படுத்தித்தான் இன்று உணவை தரும் நிலங்களையும், மழையைத்தரும் மேகத்தையும் கூட மலடாக்கி வைத்திருக்கின்றோம். மனிதத்தையாவது தழைக்க வைத்தால்தான் மாற்றங்கள் நிகழும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications