ஆப்கானில் இந்திய துணை தூதரகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல்- 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
மசார்-இ ஷரீப்: ஆப்கானிஸ்தானில் மசார் இ ஷரீப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தலிபான்கள் தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவு பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நடைபெற்ற மோதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணம் மேற்கொண்டு ஒருவாரம் கூட நிறைவடையாத நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். 3-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடித்து வருகிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தானிலும் இந்திய துணைத் தூதரகத்தை இலக்கு வைத்து நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானின் வடக்கு பகுதியில் மசார் இ ஷரீப் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்துக்குள் ஆயுதம் தாங்கிய 4 தீவிரவாதிகள் நேற்று நள்ளிரவு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதையடுத்து துணை தூதரகத்துக்கு பாதுகாப்பில் இருந்த இந்திய- திபெத் எல்லை போலீஸ் கமாண்டோ படையினரும் ஆப்கான் போலீசாரும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.
{video1}
இருதரப்புக்கும் இடையே 20 நிமிட நேரம் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தூதரகத்துக்குள் உள்ளே நுழைய முடியாத தீவிரவாதிகள் அருகே உள்ள ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து அங்கிருந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இம்மோதலின் முடிவில் தாக்குதல் நடத்த வந்த 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மசார்-இ ஷரீப் துணை தூதரகத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது ஹெராத் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications