ஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்
துனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர்.
''துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்'' என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி.
துனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.
இது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.
இந்த வானொலி நிலையம் இயங்க ஆரம்பித்த ஆறு மாதத்தில், 15 நாடுகளில் இருந்து 10,000 பேர் வானொலியைக் கேட்கின்றனர் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் பெல்ஹெடி கூறுகிறார்.
இங்கு இசை ஒலிபரப்படுகிறது, பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசப்படுகிறது. இங்கு பங்களிப்பை வழங்கிவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த வானொலி நிலையம் தொடர்ந்து இயங்குவதை மக்கள் விரும்பவில்லை. தனக்கு கொலை மிரட்டல்களும், மோசமான மேசேஜ்களும் வந்ததாக பெல்ஹெடி கூறுகிறார். அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
துனீசியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கான கட்டாய பரிசோதனையை நிறுத்தப்போவதாகக் கடந்த வருடம்தான் அரசு அறிவித்தது.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறை தண்டனைப் பதில் அபராதம் விதிப்பது, இதனைக் குற்ற வழக்கில் இருந்து நீக்குவது என அரசுக்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு இதனை ஏற்றுக்கொண்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை.
நகர்ப்புறத்திற்கு வெளியே வாழும் பெரும்பாலான துனீசிய மக்கள் பாரம்பரிய கலாசாரம் மற்றும் மத சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர்.
அரபு உலகத்தில் ஓரினச்சேர்க்கை என்பது முறையற்ற நடத்தையாகப் பார்க்கப்படுகிறது. இந்த எந்நத்தை மாற்றவே ஷம்ஸ் ராட் வானொலி நிலையம் பணியாற்றுகிறது என்கிறார் ஹியூமன் வாட்ச் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் நீலா கோஷல்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் ஊக்குவிப்பதை வானொலி நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார் பெல்ஹெடி.
துனீசில் உள்ள 24 வயதான முடி ஒப்பனையாளரான அப்திசலீம், இந்த வானொலி நிலையத்தைத் தான் தினமும் கேட்பதாக கூறுகிறார். மேலும், தன்னை வலுவானதாக உணர இது உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.
துனீசியாவில் புரட்சி ஏற்பட்டது திருப்புமுனையாக அமைந்தது. அப்போது முதல், தங்கள் உரிமைக்காக மக்கள் குரல் கொடுத்தனர்.'' என்கிறார் கோஷல்.
''தற்போதைய காலங்களில், பெண்கள் உரிமை இயக்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரினச்சேர்க்கையாளர் தங்கள் உரிமை குறித்து பேசுவதற்கும், பெண் இயக்கங்கள் ஊக்குவிக்கின்றன'' எனவும் கூறுகிறார் கோஷல்.
ஜனவரி 2018-ல் மத்திய துனீசில் LGBT திரைப்படத் திருவிழா நடக்க உள்ளது.
''இது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அரசும், காவல்துறையும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும்'' என்கிறார் கோஷல்.
துனிசிய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்துக்களை அந்த வானொலி நிலையம் ஊக்குவித்து வருகிறது என்கிறார் துனீசிய மசூதிகளின் இமாம் கவுன்சிலை சேர்ந்த ஹாஹிப் அல்-தின்
''அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது'' என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- இரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர்
- டிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்
- ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு
- 2018 உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை
- எதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?















Click it and Unblock the Notifications