ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஒரு நாள் வருமானம் மட்டுமே ரூ. 6.37 கோடி!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டி பணம் பறிப்பது, வரி விதித்தல் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் சம்பாதிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியாகியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தான் இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது. ஈராக்கில் உள்ள சில எண்ணெய் கிணறுகள் அந்த அமைப்பின் பிடியில் உள்ளது.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வருமானம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வருமானம்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மக்களை கடத்தி மிரட்டி பணம் பறித்து வருகிறது. அவ்வாறு மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.

கொள்ளை
செலவை குறைக்க ஐஎஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ராணுவ உபகரணங்களை கொள்ளையடிக்கிறார்கள். நிலங்கள், கட்டிடங்களை அபகரிக்கிறார்கள், குறைந்த அளவு ஊதியம் வழங்குகிறார்கள். ஈராக்கின் முக்கிய நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பணம்
எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றபோதிலும், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வான்வெளித் தாக்குதல் நடத்துகின்றபோதிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தனது அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு போதிய பணம் உள்ளது.

எண்ணெய் கிணறுகள்
அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

சம்பளம்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான். ஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications