ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறை... பாகிஸ்தானில் அரசு சார்பாக 'கருப்பு தினம்' அனுசரிப்பு
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் இன்று அரசு சார்பாக கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த 8-ந் தேதி மோதல் நடைபெற்றது. இதில் ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி புர்ஹான் முசாபர் வானி உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு செல்போன்கள், இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்பட 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் வன்முறையில் கொல்லப்பட்டோருக்கு இன்று துக்கம் அனுசரிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளில் அரசு ஊழியர்கள் உள்பட பலரும் இன்று கருப்பு உடைகளை அணிந்து கருப்பு தினத்தை அனுசரித்தனர்.
வெளிநாடுகளில் பாகிஸ்தான் தூதரகங்களில் பணியாற்றுபவர்களும் இன்று கருப்பு தினத்தை அனுசரித்தனர். ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் பிரச்சனையை தங்களுக்கு சாதகமான அம்சமாக மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.
இதனிடையே மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத், இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் நகரை நோக்கி ரத யாத்திரை நடத்தினார். பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானிக்கு இன்று ஜனாசா தொழுகை நடத்தவும் ஹபீஸ் சயீத் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications