மலேசியா: துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்ய தடை
கோலாலம்பூர்: மலேசிய நாட்டு துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து அந்நாட்டு அரசு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
மலேசியாவில் உணவகங்கள், கட்டுமானப் பணிகள், குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்றத் தொழில்களில் அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இப்பணிகளில் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப் படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் தற்போது இப்பணிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள பெரும்பான்மையான உணவகங்களில் இந்தியர்களே சமையல்காரர்களாகவும், பணியாளர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபகாலமாக மலேசிய மக்கள் உணவகங்களில் வேலை செய்வதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மலேசிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் துரித உணவகங்களில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரஜைகளுக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகமே கேபினெட் கமிட்டியின் செயலகமாக செயல்பட்டு வருகின்றது. இந்தக் கேபினெட் கமிட்டியின் கூட்டம் மலேசியாவின் துணைப் பிரதமர் முஹ்யுதின் யாசின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.
மலேசிய அரசின் இந்த முடிவினை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications