விமானம் கடலுக்குள் விழவில்லை, என் மகன் சாகவில்லை: சீன பயணியின் தந்தை கதறல்
பெய்ஜிங்: தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானம் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் அதை நம்ப சீன பயணிகளின் உறவினர்கள் தயாராக இல்லை.
மாயமான மலேசிய விமானத்தை தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது. இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளது என்றும், அவை மாயமான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விமானம் கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

லிடோ ஹோட்டல்
பெயங்ஜிங்கில் உள்ள லிடோ ஹோட்டலில் மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களுக்கு விமானம் குறித்த தற்போதைய தகவல்களை தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

சீனர்கள்
ஆஸ்திரேலிய பிரதமர் விமானம் பற்றி தெரிவித்ததை சீன பயணிகளின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதை அவர்கள் நம்பத் தயாராகவில்லை.

மகன்
மலேசிய விமானத்தில் பயணித்த சீனர் ஒருவரின் தந்தையான வென் வான்செங் கூறுகையில், என் மகன் உயிரோடு தான் இருக்கிறான். என் மகன் உயிரோடு தான் இருக்கிறான். இந்த செய்தியை நான் நம்ப மாட்டேன். என் மகன் இறந்துவிட்டான் என்று நான் நம்புவேன் என்று நினைக்கிறீர்களா? என் மகன் கடலுக்குள் உள்ளான் என்று என்னால் நம்ப முடியுமா? என்று கேட்டார்.

உறவினர்கள்
விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்ததாக கூறுகிறார்கள். அதன் பிறகு அது உண்மை இல்லை என்கிறார்கள். நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். எந்த செய்தியும் உறுதிப்படுத்தும் வரை நாங்கள் அதை நம்ப மாட்டோம் என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications