சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாக ஆங் சாங் சூகி மீது வழக்குப் பதிவு
யாங்கூன்: மியான்மரில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாக அவர் மீது மியான்மர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சூகி வைக்கப்படுகிறார்.
மியான்மர் தலைநகர் நைபிடாவில் உள்ள சூகியின் வீட்டில் இருந்து வாக்கி டாக்கி, ரேடியோ உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை கண்டெடுத்ததாக போலீஸார் நீதிமன்றத்தில் விவரித்தனர்.

அந்த சாதனங்கள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது என்றும் போலீஸார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். மேலும் அதிபராக இருந்த வின் மின்ட் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 1962ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.
இதனால் அவர் 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் அமோக வெற்றி பெற்றார்.
அவரது மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதனால் சூகிக்கு நெருக்கமான நபரான வின் மின்ட் அதிபராக பதவியேற்றார். தலைமை ஆலோசகராக சூகி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 642 இடங்களில் சூகி தலைமையிலான கட்சி உள்ளிட்டோர் போட்டியிட்டு அமோக வெற்றி பெர்றார் சூகி, இந்த நிலையில் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.
கடந்த திங்கள்கிழமை முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications