நேபாள நிலநடுக்கத்தில் 41 இந்தியர்கள் பலி, 10 பேர் காயம்: நேபாள அமைச்சர் தகவல்
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி 41 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள நிதியமைச்சர் ராம்சரண்மகத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 7,276 பேர் பலியாகினர். 14,267 பேர் காயம்அடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களில் 53 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 41 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் நேபாள நிதியமைச்சர் ராம்சரண்மகத் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர 10 இந்தியர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீட்பு பணியில் இந்திய விமானப்படையின் மீட்பு குழுவினர் கூர்கா மாவட்டத்தில் பூகம்பம் பாதித்த உள்ளடங்கிய ஹினாங்கோம்பா கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 22 புத்தமத துறவிகளை மீட்டனர். எவரெஸ்ட் சிகரம் ஏறும் இளம்வயது இந்தியர் அர்ஜுன் வாஜ்பாயும் மீட்கப்பட்டு காத்மாண்டு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நேபாளத்தில் நேற்று மீண்டும் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள், திறந்த வெளியில் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
எனவே கூடாரம் அமைக்கபயன்படும் தார்பாலின் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை நேபாள அரசு ரத்து செய்துள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களும் சோதனை செய்யப்படுவதாக உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லட்சுமிபிரசாத் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications