”சிறுநீரகம் விற்பனைக்கு” – நேபாளத்தில் அதிகரித்துவரும் புதிய வியாபாரம்
காத்மாண்டு: நேபாளத்தில் வசித்துவரும் மக்களிடையே சிறுநீரக விற்பனைதான் தற்போது அதிகரித்து வருகின்றது.
சுற்றுலா தலத்திற்கு பெயர் போன புகழ்பெற்ற நாடு நேபாளம். இந்நாடுதான் தற்போது சிறுநீரக விற்பனையிலும் முதலிடம் பெற்றுள்ளது.
நேபாளத்தில் மூலைக்கு, மூலை இந்த விற்பனைதான் அதிகமாக நடைபெறுகின்றது.
விவசாயிகளும் அடக்கம்:
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பலர் விவசாயிகள் என்பதுதான். தொடரும் மழையின்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
7 ஆயிரம் சிறுநீரகங்கள்:
தற்போதைய ஒரு ஆய்வின்படி, ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் சிறுநீரகங்கள் நேபாளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை வாங்கவும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோதமான செயல்:
சிறுநீரக வியாபரம் சட்ட விரோதமான ஒன்றாகும். ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
புரோக்கர்கள் அதிகம்:
இதற்காக உலக அளவில் சிறுநீரக விற்பனைக்கான புரோக்கர்கள் நேபாளத்தில் முற்றுகை இட்டுள்ளனர்.
ஒரு சிறுநீரகம் 18 லட்சம்:
ஒரு சிறுநீரகமானது 18 லட்சம் வரை விலை போவதால், நேபாளத்தில் சிறுநீரக விற்பனைதான் முதலிடத்தில் உள்ளது.