வட கொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் போர் பயிற்சி
கொரிய தீபகற்பத்தின் மீது முக்கியத்துவம் வாய்ந்த இரு குண்டுவீச்சு விமானங்களை செலுத்தி, தென் கொரியாவுடன் ஒரு கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியுள்ளது அமெரிக்கா.
பி-1பி ரக குண்டுவீச்சு விமானங்களும், தென் கொரியாவின் இரண்டு எஃப்-15கே ஜெட் போர் விமானங்களும் கொரிய கடற்பகுதி மீது பறந்து வானில் இருந்து நிலத்தைத் தாக்கும் ஏவுகணை செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டன.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்குமுன், தனது 6வது ஆணு ஆயுத சோதனையை நடத்திய வட கொரியா, ஜப்பான் வான்வெளியைக் கடந்து செல்லும் வகையில் இரு ஏவுகணைகளை வீசியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை இரவு, அமெரிக்க பசிஃபிக் பிராந்தியமான குவாம் தீவில் இருந்து அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து தென் கொரிய வான்வெளியில் நுழைந்தன. பின்னர், கிழக்கு கடற்கரை மற்றும் யெல்லோ கடற்கரையில் குண்டுகளை வீசிப் பயிற்சியில் ஈடுப்பட்டதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், வட கொரியாவுக்கு எதிரான நீட்டிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இந்த போர் பயிற்சியில் ஜப்பானின் விமானப் படையும் பங்கேற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வட கொரியாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதில் கொடுக்கும் வழிமுறைகள் குறித்துப் பேசுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு குழுவின் மூத்த அதிகாரிகளை சந்தித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சமீப வாரங்களில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் காரசாரமான கருத்துக்களைப் பரஸ்பரமாக பரிமாறி கொண்டனர்.
பிற செய்திகள்
- பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள்
- கேட்டலோனியா தனி நாடு எனப் பிரகடனம்; அமல்படுத்துவது நிறுத்திவைப்பு
- சே' குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்
- அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக













Click it and Unblock the Notifications