ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது யு.எஸ். போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்!!
வாஷிங்டன்: ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த அமெரிக்கா ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களை அந்த இயக்கம் கைப்பற்றிவிட்டது. இந்த பகுதிகளையும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற நாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் தங்களது இயக்கத்தின் பெயரையும் இஸ்லாமிய தேசம் என்று மாற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த இயக்கத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.

இவர்கள் மீது தாக்குதல் நடத்த உதவுமாறு ஈராக் அரசு பலமுறை வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது. ஆனால் அமெரிக்கா அதிபர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஒபாமா, ஈராக்கில் இனப்படுகொலை நடைபெற சாத்தியம் உள்ளதால் அதை தடுக்க நாங்கள் கவனமுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவோம்.
கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் ஈராக்கின் வடக்கு மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் மத சிறுபான்மையினரை காப்பாற்ற ஈராக் படைகளுக்கு உதவி தேவைப்பட்டால் வான்வழி தாக்குதல் நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதே நேரத்தில் ஈராக்கில் மீண்டும் முழு அளவிலான போருக்கு தாம் அனுமதிக்கவில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஒபாமாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது. இன்றைய சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 106.28 டாலராக இருந்தது. அதேபோல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையும் 1,377 டாலராக இருந்தது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications