For Quick Alerts
For Daily Alerts
Just In
அரிய வகை கழுகு ஆந்தைகளுக்கு சுதந்திரம் கொடுத்த பாலஸ்தீனம்!
பெத்லஹேம்: பாலஸ்தீன வனகாப்பத்தில் இருந்து அரிய வகை கழுகு ஆந்தைகள் சுதந்திரமாக பறக்க விடப்பட்டது.
பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகம் ஒன்றில் தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அந்த காப்பகத்தில் உள்ள அறிய வகை பறவை இனமான இரண்டு கழுகு ஆந்தைகளை சுதந்திரமாக வானத்தில் பறக்க விட்டனர்.
மெல்ல, மெல்ல அழிந்து வரும் இந்த கழுகு ஆந்தைகள் இனத்தை பெருக்கும் நோக்கில் வனத்துறை அதிகாரிகள் பறக்கவிட்டதை பாராட்டினார் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ்.
இஸ்ரேல் ஒப்பந்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள போர் சூழல் சுற்றுச்சூழலை மோசமான நிலைக்கு தள்ளியிருப்பதால், பறவைகள் மற்றும் விலங்குகளை அழிவின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என்று கூறியுள்ளார்.
Comments
English summary
The Palestine Wildlife Society celebrated National Bird Day by releasing two eagle owls in Bethlehem
Story first published: Wednesday, January 7, 2015, 11:24 [IST]