தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்சேவை வெளியே விடுங்க... திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம்
திருகோணமலை: தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

இலங்கையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது ராஜபக்சே கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதனால் வெகுண்டெழுந்த சிங்களர்கள் ராஜபக்சே, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக உக்கிரப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் தென்னிலங்கையே நேற்று பற்றி எரிந்தது.

யார் யாருக்கு பாதிப்பு?
ராஜபக்சேக்களின் குடும்ப கல்லறை, பூர்வீக வீடுகள் தொடங்கி சனத் நிஷாந்தவின் வீடு; திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு; குருநாகல் மேயர் மாளிகை; ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்; மொரட்டுவை மேயரின் வீடு; அனுஷா பாஸ்குவலின் வீடு; பிரசன்ன ரணதுங்கவின் வீடு; ரமேஷ் பத்திரனவின் வீடு;சாந்த பண்டாரவின் வீடு;ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை; நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்; அருந்திகவின் வீடு; கனக ஹேரத்தின் வீடு; காமினி லொகுகேவின் வீடு; காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு; மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்; லான்சாவின்-2 வீடுகள்; வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு;அலி சப்ரியின் வீடு; பந்துல குணவர்தன வீடு; வீரகெட்டிய மெதமுலன வீடு; கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ் ; கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்; கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் ; விமல் வீரவன்சவின் வீடு; அசோசியேட் சூப்பர் சென்டர் காலி ; சிறிபால கம்லத் வீடு ; கெஹலிய ரபுக்வெல்ல வீடு; ரோஹித அபேகுணவர்தன இல்லம் ; நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் ; காஞ்சனா விஜேசேகர இல்லம் ; துமிந்த திசாநாயக்க வீடு ; ஞானாக்கா வீடு என அத்தனையும் தீக்கிரையாக்கப்பட்டன.

தப்பி ஓடிய ராஜபக்சே குடும்பம்
இதனால் தென்னிலங்கையில் இனி உயிர்வாழ முடியாது என அஞ்சி கொழும்பில் இருந்து இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு ராஜபக்சே குடும்பங்கள் தப்பின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஏற்கனவே ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டுக்கு தப்பி ஓடக் கூடாது என்பதற்காக விமான நிலையங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு காத்திருக்கின்றனர்.

மக்கள் போராட்டம்
இந்த நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சமடைந்த தகவல் காட்டு தீயாக பரவியது. இதனையடுத்து திருகோணமலை கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தை கடற்படை முகாமில் இருந்து வெளியேற்றவும் வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்துவதால் பதற்றம் நிலவுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications