பெஞ்சில் டிகே.. ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பேட்டிங்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை. இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று நிறைவடைந்து தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற 12 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே தலா ஒரு போட்டிகள் நடத்தப்பட்டன. 2 குழுக்களிம் அதிக புள்ளிகளை எடுத்த முதல் 2 அணிகள் என 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இறுதி போட்டியில் பாகிஸ்தான்
குரூப் ஒன்றில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா VS இங்கிலாந்து
இந்த நிலையில் 2 வது அரையிறுதி சுற்றுப் போட்டி இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். இதில் இந்தியா வென்றால் 2007 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதும்.

தினேஷ் கார்த்திக் VS ரிஷப் பண்ட்
இந்த போட்டியில் வெற்றிபெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அணி தேர்வு என்பது கடைசி வரை குழப்பமாகவே இருந்து வந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர், பினிஷர் இடத்தில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கை களமிறக்குவதா? அல்லது ரிஷப் பண்டை விளையாட வைப்பதா? என்ற விவாதம் நீடித்தது.

தினேஷ் கார்த்திக்
கடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலும், ஆசிய கோப்பையிலும் சிறப்பான கீப்பிங்குடன், பினிஷர் இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதில் அவர் பேட்டிங்கில் பெரிதாக விளையாடவில்லை என விமர்சனம் எழுந்தது.

ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு
எனவே தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பண்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.

ரோகித் ஷர்மா
இதுகுறித்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டை அரையிறுதியை மனதில் வைத்து களமிறக்கியதாக தெரிவித்தார் உள்ளார். இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளின் ஸ்பின்னர்களை சமாளிக்க இந்திய கிரிக்கெட் அணியில் இடது கை பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ரோகித் ஷர்மா கூறினார்.

சஸ்பென்சுக்கு பதில்
ரிஷப் பண்டுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அவர் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது எனவும், அதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறினார். இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்டுக்கு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அதாவது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி தற்போது களமிறங்கியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications