''அமைதி பேச்சுவார்த்தைக்கு வரசொல்லிட்டு, குண்டு போட்டுட்டு இருக்காங்க..'' - உக்ரைன் குற்றச்சாட்டு!
கிவி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது, இதனால் போரை கைவிட்டு சமாதானம் பேச வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று இரண்டு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயாராகியுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பெலாரசில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டதால், போர் விமான தாக்குதல் எச்சரிக்கை நிறுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் பேசுங்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் நிலையில், ''போரை நிறுத்தச் சொல்லி ரஷ்யாவிடம் சொல்லுங்கள்'' என சக நாடுகளைப் பார்த்து கேட்டுள்ளார் உக்ரைன் நாட்டின் தூதுவர் இகோர் போலிக்கா. முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கப்போகும் சூழலிலும் உக்ரைன் நகரின் மீது குண்டு மழை பொழிகிறது ரஷ்யா என்று இகோர் போலிக்கா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.

உயிரிழப்புகள்
இகோர் மேலும் கூறுகையில், ''கடந்த ஐந்து நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், குண்டு வீச்சால் கிட்டத்தட்ட 16 குழந்தைகள் உயிரிழந்திருக்கிறார்கள். ரஷ்யாவில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. 5000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளார்கள். இந்த சூழ்நிலையில்தான் முதல் கட்ட அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

அகதிகள்
உக்ரைனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால், இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், உக்ரேனை விட்டு 7 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு செல்லும் அவலநிலை ஏற்படும். ஏற்கெனவே உக்ரேனில் பலர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்'' என இகோர் போலிக்கா தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஒப்பந்தம்
ரஷ்யா போர் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து வலுயுறுத்தி வந்தநிலையில், பல நாடுகள் முயற்சி செய்து அமைதி பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில் ரஷ்யா சொல்லும் நிபந்தனைகளுக்கு உக்ரைன் சம்மதிக்கும் பட்சத்தில், போர் உடனடியாக நிறுத்தப்படும். இல்லையென்றால் இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வரை ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications