Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தோனேசியாவை பாடாய்படுத்தும் கொரோனா.. அதிகரிக்கும் மரணங்கள்.. 1 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவை கொரோனா பாடாய்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா உயிரிழப்புகள் 1 லட்சத்தை கடந்து விட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொடுத்த அடியை யாரும் மறந்து விட முடியாது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் உயிரிழப்பு என்று சோக காட்சிகள் இருந்தன.இந்தியா பட்ட அதே நிலைமையைதான் இந்தோனேசியாவும் சந்தித்து வருகிறது.

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ ஆரம்பித்தது.

அதிக கொரோனா பாதிப்பு

அதிக கொரோனா பாதிப்பு

மார்ச் 2020 முதல் மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளது இந்தோனேசியா. மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. ஒரு புறம் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் திண்டாட, ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிக உயிரிழப்பு

அதிக உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஜூன் மாதத்தில் 7,914 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அதே வேளையில் ஜூலை மாதத்தில் மட்டும் 30,100-க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது ஜூன் மாதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து, வீட்டில் சுய-தனிமைப்படுத்தலில் இருந்தவர்களில் போது 2,800-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

எண்ணிக்கை அதிகரிப்பு

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,00,636 ஆக உயர்ந்துள்ளது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

மே மாத இறுதியில் இந்தோனேசியா 50,000 உயிரிழப்புகளை தாண்டுவதற்கு 14 மாதங்கள் ஆனது. ஆனால் அடுத்த 50,000 உயிரிழப்புகளை வெறும் ஒன்பது வாரங்களில் எட்டி இந்தோனேசியா மோசமான சாதனையை படைத்துளளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தோனேசியா 1,747 புதிய உயிரிழப்புகளை பதிவு செய்து இருக்கிறது.

விழித்துக்கொள்ளும் அரசு

விழித்துக்கொள்ளும் அரசு

ஏராளமான உயிரிழப்புகளை கண்ட பிறகு இந்தோனேசியா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தை முடுக்கி விட்டது. நாட்டின் பெரும்பாலான தொழில்துறை ஆக்ஸிஜன் உற்பத்தியை மருத்துவ பயன்பாட்டிற்கு திருப்பி விட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+