வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.. பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்த ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த பிரதமரை தோ்வு செய்ய பொதுத்தோ்தல் நடத்தப் பட்டது. தோ்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தோ்தலில் வாக்களிக்க 10 கோடி மக்கள் தகுதி பெற்றிருந்ததால் அதற்கு தகுந்த வகையில் 6 லட்சம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தேர்தல் வாக்குப்பதிவின் போது வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மோதல், வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. வாக்குப்பதிவின் போது அவாமி லீக் கட்சி மற்றும் தேசியவாத கட்சி ஆதரவாளா்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேரும், வன்முறையை தடுக்க காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவில்,இந்த தோ்தலிலும் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார்.
வங்கதேசத்தை பொறுத்தவரையில், அங்குள்ள நாடாளுமன்றத்தில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன. ஹசீனா பெரும்பான்மையை பெறுவதற்கு 151 இடங்கள் வெற்றி பெறிருக்க வேண்டும். ஆனால் அவரது கட்சி 281 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications