வங்கியில் கொள்ளை- 7 பேர் சுட்டுக் கொலை... 6 வங்கதேச தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை!
டாக்கா: வங்கதேசத்தில் வங்ககியில் கொள்ளையடிக்கும் போது 7 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே வங்காளதேச வணிக வங்கி செயல்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இந்த வங்கிக்குள் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்தனர். வங்கியில் இருந்து சுமார் 7 லட்சம் டாக்கா (இந்திய மதிப்பில் ரூ .6 லட்சம்) பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், வங்கியின் மேலாளர் உள்பட 7 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இதனிடையே மக்களிடம் சிக்கிய ஒரு தீவிரவாதி அடித்துக் கொல்லப்பட்டார்.

பின்னர், விசாரணையின் போது இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் என தெரியவந்தது.
இந்த வழக்கை டாக்கா கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 6 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications