இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுள்ள தாயின் பிள்ளைக்கு கல்வி மறுப்பு
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான தாயின் பிள்ளைக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பிள்ளையின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
கம்பகா மாவட்டம் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள அரச பள்ளிக் கூடமொன்றில் ஆரம்ப கல்வி கற்கும் மாணவியொருவருக்கே கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் இரண்டாவது பிரசவத்தின் பின்னரே எச்.ஐ.வி தொற்று நோயாளி என இனம் காணப்பட்டுள்ளார்.
பள்ளிக் கூடத்திற்கு தாங்கள் அழைக்கப்பட்டு மாணவியை வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றம் செய்யுமாறு அதிபர் மற்றும் துணை அதிபரால் கேட்கப்பட்டதாக மாணவியின் பாதுகாவலர்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகின்றது. .
மாணவி ஆரோக்கியமாக காணப்படுகின்றார்.அவருக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை அவரை நாங்கள் படிப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க மறுத்துவிட்டதாக மாணவியின் பாதுகாவலர்கள்' தெரிவிக்கின்றனர். .
வேறு பள்ளிக் கூடத்திற்கு மாற்றம் செய்தாலும் இதே பிரச்சினை வரும் என்பதால் பள்ளிக் கூடத்தை விட்டு விலகுவதற்கான காரணத்தை குறிப்பிட்டு விலகல் பத்திரம் தருமாறு கேட்ட வேளை அதற்கு பள்ளிக் கூட நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது '' இது தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.குறித்த பள்ளிக் கூடம் மாகாண சபையின் நிர்வாகத்திற்குரிய பள்ளிக் கூடமாக இருக்கலாம் '' என்கின்றார்.
''மாணவியின் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இந்த விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்கும் பட்சத்தில் கவனம் செலுத்தப்படும்'' என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
கடந்த வருடம் முற்பகுதியில் இது போன்ற பிரச்சினை குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள அரச பள்ளிக் கூடமொன்றிலும் இடம் பெற்றிருந்தது.
மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேரடியாக தலையீடு செய்து பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கண்டி மாவட்டத்திலுள்ள முன்னணி பள்ளிக் கூடமொன்றில் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திய கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் இது தொடர்பான அறிவுறுத்தல் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.அவசியம் ஏற்பட்டால் மீண்டும் அதனை நினைவுபடுத்தி சுற்றறிக்கை வெளியிடப்படுமென்றும் குறிப்பிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications