நாளை மறுநாள் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல்.. இலங்கை தமிழர் போட்டி.. யார் அவர்?

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் பொதுத் தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் இடம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் மிகவும் இளம் வயதில் ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்த பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார், ஆனால் அவர் தனது பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார்.

Srilankan tamilan contest in New Zealand election

இதையடுத்து தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார். தனது 4 வயது மகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் 54 ஆவது பொதுத் தேர்தல் நாளை மறுநாள், அதாவது சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சியை எதிர்த்து தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மை குறைவு என கூறப்படுகிறது. இருந்தாலும் சிறு கட்சிகளின் உதவியுடன் தேசிய கட்சி அடுத்த பிரதமராகும் வாய்ப்பை பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

இந்த நிலையில் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இலங்கையை சேர்நா்த பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கட்டுமான திட்ட பணிகளில் ஆலோசகராக இருந்துள்ளார். இவர் இலங்கையின் யாழ் புனித ஜான் கல்லூரி மற்றும் கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் பயின்றுள்ளார்.

தேசிய கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் லக்சான், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆகியோர் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள். இவர்களது வெற்றியானது சிறிய கட்சிகளின் ஆதரவை அடிப்படையாக கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+