சிங்கப்பூரில் பீர் கேனை ரோட்டில் வீசிய தமிழருக்கு 9 மாதம் சிறை!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரத்தில் பங்கேற்று பீர் கேனை ரோட்டில் வீசிய குற்றத்துக்காக தமிழகத்தை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவருக்கு, 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என்ற பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம்தேதி, சாலை விபத்து ஒன்றை தொடர்ந்து, திடீரென கலவரம் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன. 54 போலீஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டனர். சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு சம்பவம் நடந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து 52 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்துவருகிறது. இதில், பழனிவேல் தாஸ்மோகன் (28) என்ற ஹோட்டல் அதிபருக்கு 9 மாத சிறை தண்டனை விதித்து கோர்ட் இன்று, தீர்ப்பளித்துள்ளது.
பழனிவேல், சிங்கப்பூரில் ஹோட்டல் மற்றும் பப்புகள் நடத்தி வருகிறார். கலவரம் நடந்த இரவு, ஒரு கும்பலோடு இவரும் சேர்ந்து ரேஸ் கோர்ஸ் ரோட்டில் சுமார் 45 நிமிடங்கள் நடந்து சென்றுள்ளார். அப்போது, பீர் கேன் ஒன்றை எடுத்து அதை சாலையில் வீசி எறிந்துள்ளார். இதற்குதான் 9 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 13வது நபர் பழனிவேல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னைக்கு நாளை வருகை தரும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷண்முகம், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திக்க உள்ளார். அப்போது கலவர வழக்கில் தமிழர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications