கட்டுப்பாடுகளுடன்.. நைட் கிளப்களை திறக்கும் தாய்லாந்து.. பலே முடிவு.. பலான தொழில் தலை நிமிருமா?
பாங்காக்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாங்காக்கின் சிவப்பு விளக்குப் பகுதியில் தொழில் நடத்தி வரும் பெண்கள் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தற்போது மாஸ்க் அணிந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக தாய்லாந்து நாட்டில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பார்கள், இரவு நேர கேளிக்கை நடனங்களுக்கு பெயர் பெற்ற பாங்காக் நகரமும் வெறிச்சோடியது.
எங்கு பார்த்தாலும் பார்கள், இரவு நேர நடனங்கள் என்று வண்ண விளக்குகளில் மிளிரும் பாங்காக்கிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் இல்லாமல் போனது.

நைட் கிளப்கள்
தற்போது கடந்த 37 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை என்ற நிலையில், கட்டுப்பாடுகளுடன் பார்கள், பின்னணி இசையில் மக்கள் பாடும் கிளப்புகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. பாங்காக் விடுதிகளை நம்பி பல ஆயிரக்கணக்கான செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல் அவஸ்தைப்பட்டு வந்தனர்.

மாஸ்க் அணிந்து டான்ஸ்
தற்போது மாஸ்க் அணிந்துதான் கேளிக்கை விடுதிகளில் பெண்கள் நடனமாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது விடுதிகள் திறக்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

காய்ச்சல் இல்லாட்டி ஓகே
பார்களுக்கு, இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று சோதித்த பின்னரே அனுமதிக்கப்படுவர். தங்களது தொலைபேசி எண்களை விடுதியில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு கட்டுப்பாடு தளர்வு
கடந்த சில வாரங்களுக்கு முன்பே மக்களுக்கான கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தி இருந்தது. பள்ளிகளும் கடந்த புதன் கிழமை திறக்கப்பட்டன. ஆனால், அந்த நாட்டில் கோழிச் சண்டை மற்றும் மீன் சண்டைக்கான இடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதுவரை தாய்லாந்து நாட்டில் 3,173 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று குறைவுதான்
ஆசிய நாடுகளில் குறைவான தொற்று இருக்கும் நாடாக தாய்லாந்து இருக்கிறது. தாய்லாந்து முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், நடப்பாண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 80% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications