சவுதியின் சொகுசு சிறை மீண்டும் ஹோட்டலாக மாற்றப்பட்டது.. தொடங்கியது புக்கிங்!
சவுதியின் சொகுசு சிறை மீண்டும் ஹோட்டலாக மாற்றப்பட்டு இருக்கிறது.
ரியாத்: சவுதி அரேபியாவில் தற்போது தொடர் அரசியல் மாற்றங்கள் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் பல இளவரசர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
முக்கியமாக சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கும் முக்கிய அதிகாரிகளின் வீட்டில் சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை நடத்தினார்.
இதன் பின்பே பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அங்கு இருக்கும் ''தி ரிட்ஸ் கார்ட்லான்'' ஹோட்டலில் சிறையடைக்கப்பட்டார்கள்.

அல்வாலீத் பின் தலால் கைது
இதில் சவுதியின் முக்கியமான பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பண மோசடி செய்ததாகவும், நாட்டின் பொருளாதரத்தை சிதைத்ததாகவும் கூறப்பட்டது.

ஹோட்டல்
இவர் உள்ளிட்ட அனைவரும் ''தி ரிட்ஸ் கார்ட்லான்'' ஹோட்டலில் சிறையடைக்கப்பட்டார்கள். அந்த ஹோட்டலில் 492 அறைகளில் இவர்கள் இருந்தார்கள். இதனால் அந்த ஹோட்டல் மூடப்பட்டு தற்காலிக சிறைச்சாலையாக செயல்பட்டது.

பலர் விடுதலை
இந்த நிலையில் சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு தவறு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 381 பேரில் 56 பேர் மட்டும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு மற்றவர்கள் நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் இயங்கும்
இதனால் அந்த ஹோட்டல் மீண்டும் இயங்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பிப்ரவரி 14ம் தேதியில் இருந்து முன்பதிவு ஆரம்பம் ஆகும். முன்பு இருந்ததை விட அனைத்து அறைகளின் விலைகளும் குறைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications