புனித நூலுடன் இந்தியா புறப்பட்ட சீக்கியர்கள்.. தடுத்து நிறுத்திய தாலிபான்கள்.. என்ன காரணம்?
அமிர்தசரஸ்: ஆப்கானிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் பலர் வெளியேறி வரும் நிலையில், புனித நூலுடன் செல்லும் சீக்கியர்களுக்கு வெளியேற அனுமதி கிடையாது என்று அவர்களை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தி ஆட்சி நடத்தி வரும் தாலிபான்கள் பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்ளிட்ட மிகக்கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

சீக்கியர்களுக்கு அனுமதி மறுப்பு
தாலிபான்கள் ஆட்சியில் நாடு முழுவதும் பல இடங்களில் வறுமை தாண்டவம் ஆடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி ஆப்கானிஸ்தானில் கொடுங்கோல் ஆட்சியை தாலிபான்கள் நடத்தி வருவதாக அடிக்கடி செய்திகள் உலா வரும் நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில், தாலிபான்களின் ஒரு நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவுக்கு புனித பயணமாக வர இருந்த சீக்கியர்கள் 60 பேரை தாலிபான்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடந்த 11 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் திட்டத்துடன் கிளம்பிய சீக்கியர்கள் 65 பேரையும் தடுத்து நிறுத்திய தலிபான்கள், அவர்களிடம் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் இருந்ததால் அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC), இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சீக்கியர்களின் உணர்வுகள் புண்படாத படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

புனித நூலை எடுத்துவர அனுமதி மறுப்பு
இது தொடர்பாக சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ''சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே எடுத்து வர அனுமதி மறுத்த தாலிபான்களின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. 60 சீக்கியர்கள் கடந்த 11 ஆம் தேதியே இந்தியா வந்திருக்க வேண்டியது. ஆனால், புனித நூலை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களால் வர முடியவில்லை. சீக்கியர்களின் மத விவகாரங்களில் தாலிபான்களின் நேரடி தலையீடு இதுவாகும்.

சீக்கியர்கள் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் ஒருபக்கம் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் மற்றொரு புறம் தங்களின் புனித நூலை இந்தியாவுக்கு எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த காரணத்தினாலேயே அந்நாட்டை விட்டு சீக்கியர்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் வசிக்காத பட்சத்தில் ஸ்ரீ குரு கிராந்த் ஷாகிப் ஜி புனித நூலை யார் பாதுகாப்பார்கள்'' என்றார்.

மத உணர்வுகளை புண்படுத்தும்..
மேலும் அவர் கூறுகையில், 'இத்தகைய காரணங்களுக்காக மட்டுமே தங்களின் புனித நூலை சீக்கியர்கள் தங்களுடன் இந்தியாவுக்கு எடுத்து வருகின்றனர். எனவெ, சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தாலிபான்கள் நடந்து கொள்ளக்கூடாது' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications