இது எங்க ஏரியா உள்ள வராத.. கொரோனாவுக்கே குல்லா போட்ட நாடுகள் எவை..?வூ வெளியிட்ட பட்டியல் இதுதான்..!
ஸ்விட்சர்லாந்து : Covid-19 எனப்படும் கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகத்தில் உள்ள சில நாடுகளில் இன்னும் ஒருவர் கூட கொரோனா காரணமாக பாதிக்கப்படாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆச்சரியம் அளிக்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கூட பல நாடுகளில் தினசரி எண்ணிக்கை புதிய சாதனைகளை முறியடித்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், உலகில் உள்ள இன்னும் சில நாடுகள் கொரோனா தொற்றுநோய் ஒருவருக்கு கூட பாதிக்கப்படாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 10 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பெரும்பாலானவை பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் உள்ள தீவுகளாகும்.

கொரோனா இல்லாத நாடுகள்
மேலும் அவை கடலை மட்டுமே எல்லையாக கொண்டுள்ளதால் மற்ற நாடுகளில் இருந்து விலகியோ உள்ளதால் கொரோனா பாதிப்பு அவர்களை நெருங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டியல் இன்னும் நீளமாக இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. டோங்காவில், சமீபத்தில் எரிமலை வெடிப்புக்கு பிறகு கப்பல்கள் மூலம் வந்த உதவி மற்றும் நபர்களால் அங்கு பாதிப்பு ஏற்பட்டது. டோங்காவில் கடந்த மாதம் கொரோனா திடீரென வேகமாகப் பரவியது. இதேபோல், குக் தீவுகளும் அதன் முதல் கொரோனா வழக்கை கடந்த வாரம் அறிவித்தது.

ஒருவருக்கு கூட இல்லை
ஆனாலும் கொரோனா இல்லாத நாடுகள் பட்டியலில் இன்னும் சில நாடுகள் உள்ளன. அவை, துவாலு, டோகெலாவ், செயின்ட் ஹெலினா, பிட்கேர்ன் தீவுகள், நியு ஆகியவை ஆகும். கடல் எல்லைகளை மூடியது, வெளி நபர்களை அனுமதிக்காததது ஆகியவற்றின் காரணமாக இங்குள்ள மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகவில்லை. இதேபோல் நவ்ரு, மைக்ரோனேஷியா மற்றும் அதில் உள்ள சவுக், கோஸ்ரே, ப்பென்பே, யாப் ஆகிய பகுதிகளிலும் இன்று வரை ஒருவருக்கு கூட கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

காரணம் என்ன?
இந்த பட்டியலில் இல்லாத துர்க்மெனிஸ்தான் மற்றும் வட கொரியா கொரோனா இல்லாத நாடுகளாக பட்டியலிட்டுள்ளது. இந்த நாடுகள் நோய்த்தொற்றின் எந்தவொரு வழக்கையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications