பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா!
ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

பிரேசிலில் தாக்கம் அதிகம்
உலக நாடுகளை பொறுத்தவரையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஆட்டிபடைத்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,202 பேர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து அங்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2,16,445 ஆக அதிகரித்துள்ளது.

ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றசாட்டு
பிரேசிலில் இந்த அளவுக்கு கொரோனா பரவியதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மோசமான செயல்பாடுகளே என கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

வீதிகளில் இறங்கி போராட்டம்
இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்திய மக்கள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். கார்களில் சென்றும், பேரணியாக சென்றும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
போராட்டத்தில் ஈடுபட்ட 66 வயதான என்ஜினீயர் மெக் பெர்னாண்டஸ் கூறியதாவது:-
போல்சனாரோ வந்தபோது அவரது முன்மொழிவுகளுக்கு நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், ஆனால் இப்போது தொற்றுநோயால் நிலைமை பயங்கரமாகி விட்டது. அவரது நடவடிக்கை சரியில்லை.வடக்கு நகரமான மனாஸின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்று மெக் பெர்னாண்டஸ் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications