3 விமானங்களில் ரஷ்யாவில் இருந்து எகிப்து விரைந்த மீட்பு குழு
மாஸ்கோ: விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு குழுவினரை அனுப்புமாறு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதையடுத்து மீட்பு குழுவினர் எகிப்து கிளம்பினர்.
224 பேருடன் எகிப்தில் இருந்து ரஷ்யா கிளம்பிய விமானம் சினாய் மாகாணத்தில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகினர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து 2 கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு மீட்பு குழுவினரை அனுப்பி வைக்குமாறு ரஷ்ய அதிபர் புதின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து 3 விமானங்களில் மீட்பு குழுவினர்கள், விமான போக்குவரத்து நிபுணர்கள், அமைச்சர் விளாடிமிர் புஷ்கோவ், போக்குவரத்து துறை அமைச்சர் மேக்சிம் சோகோலோவ் மற்றும் ரஷ்ய விமான போக்குவரத்து ஏஜென்சியின் தலைவர் அலெக்சாண்டர் நெராட்கோ ஆகியோர் எகிப்து கிளம்பியுள்ளனர்.
விமான விபத்து குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. விமானத்தில் 10 மாத பெண் குழந்தை, 2 மற்றும் 3 வயது குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகள் இருந்தனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 3 பேரை தவிர அனைவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். எகிப்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்புகையில் நடந்த விபத்தில் அவர்கள் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications