மாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு
இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார்.
லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார்.
லண்டனில் தொடங்கியுள்ள 5வது வருடாந்திர யுகே- இந்தியா லீடர்ஷிப் மாநாடு நடக்கிறது. பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி இந்தியா- பிரிட்டன் இடையே இந்த உயர்நிலை கூட்டம் தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார். இவருக்கு முன்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சினிமா எதிர்காலம் குறித்து பேசினார். முக்கியமாக மீடியா எப்படி எல்லாம் மாறியுள்ளது என்றார்.
டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசிய போது, நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு ஊடக செய்தியை எடுத்து பார்த்தாலும் அது அதிக பட்சம் மாநில மொழிகளில்தான் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகித செய்திகள், ஊடக விஷயங்கள் மாநில மொழிகளில்தான் இருக்கிறது. மாநில மொழிகள் இங்குதான் அதிக பங்கு. வகிக்கிறது
இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் மாநில மொழிகளில் பேசுகிறார்கள், மாநில மொழியில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதி அதற்கு பெரிய அளவில் உதவுகிறது.
2020களில் இந்தியா முழுக்க பல மொழிகளில் மக்கள் பல விஷயங்கள் நுகர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கு புரியும். அவர்கள் உங்கள் பொருளை வாங்குவார்கள்.
அதேபோல் ஊடகங்களை அரசு கவனிக்கும் வழக்கமும் இருக்கிறது. அது இரண்டு விதமான விதங்களில் மக்களை பாதிக்கிறது. ஊடகங்களை நல்ல விதமாகவும் கட்டுப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
மேலும் ஒரு படம் வெளியானால், அந்த படம் வெற்றிபெற்றால் அது பிறமொழிகளில் வெளியாகிறது. தென்னிந்தியாவில் இருந்து பல மொழிகள் பிறமொழிக்கு சென்றுள்ளது. அப்படித்தான், ஒரு விஷயம் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்றால் அது மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.
மிகவும்சிறியதாகவும் , நன்றாகவும் இருந்தால் மட்டுமே மக்களுக்கு பிடிக்கும். இதனால் நிறைய மாநில மொழி செய்திகளை, தகவல்கள் கொடுக்க வேண்டும் . இதற்காக இந்திய அளவில் தனியாக தளங்களை உருவாக்க வேண்டும். இதுவரை வென்ற பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதைத்தான் செய்துள்ளது, என்றுள்ளார்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications