மாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு
இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார்.
லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் இன்று நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார்.
லண்டனில் தொடங்கியுள்ள 5வது வருடாந்திர யுகே- இந்தியா லீடர்ஷிப் மாநாடு நடக்கிறது. பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி இந்தியா- பிரிட்டன் இடையே இந்த உயர்நிலை கூட்டம் தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசினார். உமாங் பேடி இந்திய ஊடக படைப்பாற்றலின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார். இவருக்கு முன்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சினிமா எதிர்காலம் குறித்து பேசினார். முக்கியமாக மீடியா எப்படி எல்லாம் மாறியுள்ளது என்றார்.
டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேசிய போது, நீங்கள் இந்தியாவில் எந்த ஒரு ஊடக செய்தியை எடுத்து பார்த்தாலும் அது அதிக பட்சம் மாநில மொழிகளில்தான் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவிகித செய்திகள், ஊடக விஷயங்கள் மாநில மொழிகளில்தான் இருக்கிறது. மாநில மொழிகள் இங்குதான் அதிக பங்கு. வகிக்கிறது
இந்தியாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் மாநில மொழிகளில் பேசுகிறார்கள், மாநில மொழியில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதி அதற்கு பெரிய அளவில் உதவுகிறது.
2020களில் இந்தியா முழுக்க பல மொழிகளில் மக்கள் பல விஷயங்கள் நுகர ஆரம்பிப்பார்கள். நீங்கள் அவர்கள் மொழியில் பேசினால் அவர்களுக்கு புரியும். அவர்கள் உங்கள் பொருளை வாங்குவார்கள்.
அதேபோல் ஊடகங்களை அரசு கவனிக்கும் வழக்கமும் இருக்கிறது. அது இரண்டு விதமான விதங்களில் மக்களை பாதிக்கிறது. ஊடகங்களை நல்ல விதமாகவும் கட்டுப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
மேலும் ஒரு படம் வெளியானால், அந்த படம் வெற்றிபெற்றால் அது பிறமொழிகளில் வெளியாகிறது. தென்னிந்தியாவில் இருந்து பல மொழிகள் பிறமொழிக்கு சென்றுள்ளது. அப்படித்தான், ஒரு விஷயம் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்றால் அது மாநில மொழிகளில் இருக்க வேண்டும்.
மிகவும்சிறியதாகவும் , நன்றாகவும் இருந்தால் மட்டுமே மக்களுக்கு பிடிக்கும். இதனால் நிறைய மாநில மொழி செய்திகளை, தகவல்கள் கொடுக்க வேண்டும் . இதற்காக இந்திய அளவில் தனியாக தளங்களை உருவாக்க வேண்டும். இதுவரை வென்ற பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதைத்தான் செய்துள்ளது, என்றுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications