போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு
கீவ்: உக்ரைன் நாட்டிற்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யாவை போரை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
உக்ரைனில் நேற்று 10 ஆவது நாளாக நடந்த தாக்குதலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மனிதாபிமான அடிப்படையில் சில பகுதிகளில் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்தது.
இதையடுத்து மீண்டும் போரை தொடங்கியது இன்று 11 ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனை விட்டு வெளியேற மாட்டோம் என அதிபர் ஜெலன்ஸ்கியும் கடுமையாக போராடி வருகிறார். அவ்வப்போது பொதுமக்கள் முன்பு ஜூம் மீட்டில் தோன்றி பேசி வருகிறார்.

உக்ரைன் மீதான போர்
உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என எத்தனையோ நாடுகள் கேட்டுக் கொண்ட நிலையிலும் ரஷ்யாவோ கேட்டபாடில்லை. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், போர் நிறுத்த ஒப்பந்தங்களை ரஷ்யா மீறி வருகிறது.

அப்பாவி பொதுமக்கள்
அப்பாவி பொதுமக்களையும் வெளிநாட்டு மாணவர்களையும் ரஷ்ய ராணுவத்தினர் சுடுவதை நிறுத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகள் வரை ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை உக்ரைன் வரவேற்றுள்ளது. எனவே அவர்கள் இந்த போர் சூழலில் நாட்டை விட்டு வெளியேற அந்த மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

ரயில்கள்
அவர்கள் வெளியேற ரயில்களை ஏற்பாடு செய்துள்ளோம். உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளோம். தூதரகத்துடன் பணியாற்றி வருகிறோம். உக்ரைன் அரசு தங்களால் இயன்ற அளவு செய்து வருகிறோம். உக்ரைனில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் அனுதாபத்தை பெற ரஷ்யா முயற்சிக்கிறது.

ரஷ்யா
வெளிநாட்டு மாணவர்களை ரஷ்யா மோசமாக கையாள்வதை நிறுத்தினால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவர். இதற்காக இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாட்டு அரசுகள் ரஷ்யாவிடம் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறும் அப்பாவி மக்களை தாக்காமல் இருக்குமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications