அணுஆயுதங்களை தொடர்ந்து தயாரிப்போம்.. முடிஞ்சத பாத்துக்குங்க.. அசராத வடகொரியா!
தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது.
பியாங்ஜியாங்: தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரிப்போம் என வடகொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐநா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக நிறைவேறியது. 15 உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

வடகொரிய ஏற்றுமதி பாதிப்பு
இந்த பொருளாதார தடை, வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களை குறிவைத்து கொண்டு வரப்பட்டது. இனி வடகொரியா இரும்பு தாது, கடல் உணவு போன்றவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது என கூறப்பபடுகிறது.

இறையாண்மைக்கு எதிரானது
இதனால் அந்நாட்டுக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வடகொரியா, பொருளாதார தடை வடகொரியா இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மேசை
அமெரிக்காவில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது பேச்சுவார்த்தை மேசை மீது அணுகுண்டு ஆயுதங்களை வைக்க மாட்டோம் என்றும் வடகொரியா கூறியுள்ளது.

பின்வாங்க மாட்டோம்
எங்கள் அணுசக்தி வலிமையை வலுப்படுத்துவதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் வடகொரியா தெளிவாக தெரிவித்துள்ளது. பொருளாதார தடை விதித்த நிலையிலும் வடகொரியா அடங்காமல் அணு ஆயுதங்களை தயாரிப்போம் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications